பரபரப்பு… நடிகை குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் அண்ணா அறிவாலயம், நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்பு ஆகியோர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்குமாரின் மகன் நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு இமெயில் வந்தது. இதையடுத்து அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என்று தெரிய வந்தது.

காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு வந்த மெயிலில்,” சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, சென்னை அண்ணா அறிவாலயம், சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்தை வெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த 7 இடங்களிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர். ஆனால், வெடிக்கும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இந்த மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *