பரபரப்பு… விமானத்தில் பிரபல நடிகர் குடிபோதையில் தகராறு!

பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார். அப்போது அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர். இதனால் விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் பாடகர் சாமர ரணவக்க கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குடிபோதையில் விமானத்தில் பாடகர் சாமர ரணவக்கவை அனுமதிக்க முடியாது என்று விமானத்தின் தலைமை விமானி முடிவெடுத்தார். இதுகுறித்து உடனடியாக அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் விமானத்தில் இருந்து பாடகர் சாமர ரணவக்க வலுக்கட்டாயமாக பணியாளர்களால் வெளியேற்றப்பட்டதுடன் காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பாடகர் சாமர ரணவக்க அதிக மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவரை எச்சரித்து வீட்டுக்குச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *