பயங்கரம்…சென்டர் மீடியனில் கார் மோதியதால் தீப்பிடித்து 3 பேர் சாவு

விக்கிரவாண்டி அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே மூணாறுக்குச் சுற்றுலா சென்ற கார் இன்று அதிகாலை, சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கார் உடனே தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காரில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்த சம்சுதீன், கொளத்தூரைச் சேர்ந்த ரிஷி, ஆவடி மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து இவர்கள்,  மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.  அத்துடன் கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *