சீனாவை சூறையாடிய ரகசா புயல்… 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

ரகசா புயல் காரணமாக சீனாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் , மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவிக்கின்றன.

ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரகசா புயல். தென் சீனக்கடலில் உருவான புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த புயல் தைவான், பிலிப்பைன்சில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 124 பேரை காணவில்லை. தமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிலிப்பைன்சின் வடக்கே 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தைவானை உருக்குலைத்த இந்த புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் மணிக்கு 200 கி.மீட்டரில் இருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியதால் குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் அத்துடன். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *