அதிர்ச்சி… டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டிடம்

டெல்லியின் சப்ஜி மண்டியில் இன்று அதிகாலை திடீரென நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக தீயணைப்புச் சேவைக்கு இன்று அதிகாலை 3.05 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. நெரிசலான பஞ்சாபி பஸ்தி பகுதியில் அமைந்துள்ள அந்த நான்கு மாடிக் கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்ததாக அப்பகுதியில் இருந்து மக்கள் கூறினர். இதனால் அருகில் வசிப்பவர்கள் விழித்துக் கொண்டனர்.

இந்த கட்டிடம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு முன்கூட்டியே காலி செய்யப்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால், கட்டிடத்தில் யாரும் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்பு சேவை வீரர்கள் உறுதிப்படுத்தினர். டெல்லி நகராட்சி(எம்சிடி) இந்த கட்டிடத்தை ஆபத்தானது என்று குறிப்பிட்டதன் அடிப்படையில், அதில் இருந்தவர்கள் ஏற்கெனவே காலி செய்யப்பட்டிருந்தனர். இடிந்து விழுந்த கட்டிடம் காலியாக இருந்தபோதிலும், 14 பேர் அருகிலுள்ள கட்டமைப்பில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக அனைவரையும் மீட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *