இது பாஜக வளர்ச்சிக்கு நல்லதல்ல: தமிழக தலைவர்களை லெப்ட் ரைட் வாங்கிய அமித்ஷா!

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிலவும்  உட்கட்சி பூசல்களைக் களைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பாஜக உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவது, கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, தமிழ்நாட்டில் பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன், எல் முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார். மேலும், அவர் கூறுகையில், ” தமிழக பாஜக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக அவசியம். கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது” என்று வலியுறுத்தினார்.

இந்த பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *