
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 78,,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதம் 27-ம் தேதி ஒரு சவரன் மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 29-ம் தேதி ரூ.76 ஆயிரத்தையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றும் விலை அதிகரித்திருந்தது. நேற்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் 9,725 ரூபாய்க்கும், ஒரு சவரன் .77,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் 78,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, 9,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.