22 பேரும் குற்றவாளிகள்- ஆம்பூர் கலவர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேரும் குற்றவாளிகள் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா(25). இவர் பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் பவித்ரா காணாமல் போனார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது கணவர் பழனி, ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் பிரேம்ராஜ், பவித்ராவுடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஷமீல் அஹமத்(26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது ஷமீல் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில் விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு உறவினர்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 500-க்கும மேற்பட்டோர் 2015 ஜூன் 27–ம் தேதி ஆம்பூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்னர். ஷமீல் அஹமதுவை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊர்வலமாகச் சென்று சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட காவல் வாகனங்களும் சேதமடைந்தது. ஆம்பூர் கலவரம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் 25 லட்சம் மதிப்புடைய அரசு சொத்துக்கள் சேதமாகின.

இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றவர்களை விடுதலை செய்துள்ளது. இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *