வீடு புகுந்து மாணவியை சுட்டுக்கொலை செய்த வாலிபர்- காதலை துண்டித்ததால் ஆத்திரம்!

மேற்கு வங்காளத்தில் 19 வயது கல்லூரி மாணவியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணநகரைச் சேர்ந்தவர் இஷிதா மாலிக்(19).  விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த இஷிதா மாலிக் மருத்துவம் படிக்க விரும்பியதால் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு  நீட் தேர்விற்கு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள்  புகுந்த வாலிபர்,  இஷிதா மாலிக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் இஷிதா மாலிக் சரிந்து விழுந்தார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இஷிதா மாலிக்கை சக்திநகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது இஷிதாவை சுட்டுக்கொலை செய்தவர் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள காஞ்ச்ரபராவைச் சேர்ந்த தேப்ராஜ் சிங்(21) என்பது தெரிய வந்தது. இஷிதாவுடன் கல்லூரியில் படிக்கும் போது இவர் பழகியுள்ளார். இதனால் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவப்  படிப்பதற்காக காதலை முறித்துக் கொண்டதால் இஷிதா மாலிக்கை தேப்ராஜ் சிங் சுட்டுக்கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணநகர் காவல் கண்காணிப்பாளர் அமர்நாத் கூறுகையில், .” இஷிதா மாலிக்கின் உடலில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தேப்ராஜ் சிங் தலைமறைவாக உள்ளார். அவரை விரைவில் கைது செய்வோம் என்றார். சர்க்யூட் ஹவுஸ் மற்றும் மாவட்ட நீதிபதியின் குடியிருப்பு போன்ற உயர் பாதுகாப்பில் நிறுவனங்கள் அருகில் உள்ள இடத்தில் மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *