அதிகாலையில் அதிரடி காட்டிய ஐ.டி… அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பாதுகாவலரான அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட போதும், சமீபத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *