அதிகாலையில் அதிரடி காட்டிய ஐ.டி… அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பாதுகாவலரான அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட போதும், சமீபத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *