
திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபியக இருந்த ஆயுஷ்மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக ( ஏடிஜிபி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண் குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.