உ.பியில் அடுத்த அட்ராசிட்டி- போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய 6 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் போலியாக சர்வதேச போலீஸ் நிலையம் அமைத்து பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாகவும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீஸார் கடந்த மாதம் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மோசடி கும்பல் ஒன்று, சர்வதேச காவல் நிலையம் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவின் செக்டார் 70-ல் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பதாக கவுதம புத்த நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அங்கு போலீஸார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 6 பேரை பிடித்து விசாரித்த போது, போலியாக சர்வதேச காவல் நிலையம் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தை அவர்கள் நடத்தியதை அறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

காவல் துறை அதிகாரிகள் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைக, போலி பேட்ஜ், உடை ஆகியவற்றை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் பொதுமக்களிடமிருந்து www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சோதனையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்று டி.சி.பி அவஸ்தி கூறியுள்ளார். இந்த மோசடியில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். போலி காவல் நிலையம் நடத்தி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *