களத்தில் இறங்க தேதி குறிச்சாச்சு… தவெகவினருக்கு சந்தோஷ அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆக.21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரையில் ஆக-25-ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்தார். இதையடுத்து மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. அன்றைய தினமே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஆக.27-ம் தேதி வர இருப்பதால் மாநாடு நடைபெறும் தேதியை மாற்றியமைக்குமாறு காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று ஆக.21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது- பிரேமலதா எச்சரிக்கை

தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியும் விஜய்காந்த் படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக வேலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அத்துடன் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை…

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம்- உச்ச நீதிமன்றம் அதிரடி

முதல்வரின் பெயர், படம் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாயை உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *