களத்தில் இறங்க தேதி குறிச்சாச்சு… தவெகவினருக்கு சந்தோஷ அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆக.21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரையில் ஆக-25-ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்தார். இதையடுத்து மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. அன்றைய தினமே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஆக.27-ம் தேதி வர இருப்பதால் மாநாடு நடைபெறும் தேதியை மாற்றியமைக்குமாறு காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று ஆக.21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…

சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *