களத்தில் இறங்க தேதி குறிச்சாச்சு… தவெகவினருக்கு சந்தோஷ அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆக.21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரையில் ஆக-25-ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்தார். இதையடுத்து மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. அன்றைய தினமே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஆக.27-ம் தேதி வர இருப்பதால் மாநாடு நடைபெறும் தேதியை மாற்றியமைக்குமாறு காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று ஆக.21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மதுரையில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *