‘கோவை வரும் மோடிக்கு கறுப்பு கொடி காட்டினால்’…எச்சரிக்கும் வானதி சீனிவாசன்!

கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டினால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினர் அதே பாணியில் போராட்டம் நடத்துவார்கள் என்று வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (நவம்பர் 19) தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக அவர் இன்று மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர். வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவது; மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்களை பறக்கவிடுவது என எந்த ஒரு போராட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது; அப்படி தமிழ்நாடு அரசு அனுமதித்தால் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினரும் அதையே செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

Related Posts

அரசு பேருந்துகள் மோதி கோர விபத்து – பலி எண்ணிக்கை 11ஐ தாண்டும் என தகவல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கோர விபத்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.…

மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை மீனாட்சி சவுத்ரி – பாடல் செம வைரல்!

தெலுங்குவில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீனாட்சி சவுத்ரி ஆடிய நடன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் வெளியீடு! வரும் பொங்கல் பண்டிகை யொட்டி தெலுங்கு திரையுலகில் வெளியாக உள்ள “அனகனக ஓக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *