ரூ.50,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா?…பிஎஸ்என்எல் நிறுவனம் அழைக்கிறது!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்வில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது  வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்,பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

டெலிகாம் பிரிவில் 95, பைனான்ஸ் பிரிவு 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பள வரம்பு 24,900 ரூபாயிலிருந்து 50,500 ரூபாய் வரையாகும். கல்வித்தகுதி B.Tech/B.E, CA, வயது வரம்பு என்பது 21 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *