பசும்பொன்னில் பரபரப்பு… பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பூசாரியின் கன்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்
நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக சார்பில் ஜி.கே.மணி ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வந்தார். அப்போது பூசாரிகள் தடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், ஒரு பூசாரியின் கன்னத்தில் அறைந்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அமர்ந்து சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீஸார் மற்றும் சமூக அமைப்பினர் சமாதானம் செய்ததை அடுத்து அவர் தர்ணாவை கைவிட்டார். இந்த சம்பவத்தால் பசும்பொன்னில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *