பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் ஆடிப்போன பாதுகாவலர்கள்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த பங்களாவிற்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென உள்ளே நுழைந்தவர், மொட்டை மாடிக்குச் சென்று பதுங்கிக் கொண்டார். விஜய் வீட்டில் உள்ள பாதுகாவலர்கள், அந்த மர்ம நபரை தேடினர். கடைசியில் அவர் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

அவரைப் பிடித்து அவர்கள் போலீஸார் வசம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண்(24) என்பவது தெரிய வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக அவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மனநல காப்பகத்தில் அருண் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி,…

நடிகைக்காக 2 பேரை சுட்டுக் கொன்ற போலீஸார்… உ.பியில் நடந்தது என்ன?

நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை உத்தரப்பிரதேச அதிரடிப்படை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் நடிகை திஷா பதானி. இவர் தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லோபர்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *