பூலித்தேவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்- நயினார் நாகேந்திரன்!

பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிj பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பூலித்தேவர், தனது இளம் வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், மற்றும் வாள் வீச்சு போன்ற தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார்.

அவரது வீரம், வலிமையான உடல் கட்டமைப்பு, மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஆங்கிலேயப் படைகளை நடுநடுங்கச் செய்தன. இந்தியாவின் பல மன்னர்கள் ஆங்கிலேயர்களின் பலத்தைக் கண்டு அஞ்சிய நேரத்தில், பூலித்தேவர் மட்டுமே துணிச்சலுடன் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்.

கி.பி. 1755-ல், கர்னல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேயப் படையை எதிர்த்து பூலித்தேவர் போரிட்டார். இந்தப் போரில், ஆங்கிலேயப் படையை முழுமையாகத் தோற்கடித்து, இந்திய மன்னர்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்தார். ஆங்கிலேயர்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை இந்தியர்களுக்கு ஏற்படுத்தியதில் பூலித்தேவரின் பங்கு அளப்பரியது. பூலித்தேவர் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல, மாபெரும் கொடையாளியும் கூட.

திருநெல்வேலி சீமையில் உள்ள பல கோயில்களுக்கு அவர் அளித்த கொடைகள், இன்றும் அவரது பெருமையைப் பறைசாற்றுகின்றன. தனது மக்களுக்கு ஒரு நல்ல தலைவராகவும், தனது நாட்டுக்கு ஒரு சிறந்த பாதுகாவலராகவும் திகழ்ந்த பூலித்தேவரின் வரலாறு, ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகத்தைத் தரும்.  இன்றைய நாளில், பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *