பூலித்தேவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்- நயினார் நாகேந்திரன்!

பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிj பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பூலித்தேவர், தனது இளம் வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், மற்றும் வாள் வீச்சு போன்ற தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கினார்.

அவரது வீரம், வலிமையான உடல் கட்டமைப்பு, மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஆங்கிலேயப் படைகளை நடுநடுங்கச் செய்தன. இந்தியாவின் பல மன்னர்கள் ஆங்கிலேயர்களின் பலத்தைக் கண்டு அஞ்சிய நேரத்தில், பூலித்தேவர் மட்டுமே துணிச்சலுடன் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்.

கி.பி. 1755-ல், கர்னல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேயப் படையை எதிர்த்து பூலித்தேவர் போரிட்டார். இந்தப் போரில், ஆங்கிலேயப் படையை முழுமையாகத் தோற்கடித்து, இந்திய மன்னர்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்தார். ஆங்கிலேயர்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை இந்தியர்களுக்கு ஏற்படுத்தியதில் பூலித்தேவரின் பங்கு அளப்பரியது. பூலித்தேவர் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமல்ல, மாபெரும் கொடையாளியும் கூட.

திருநெல்வேலி சீமையில் உள்ள பல கோயில்களுக்கு அவர் அளித்த கொடைகள், இன்றும் அவரது பெருமையைப் பறைசாற்றுகின்றன. தனது மக்களுக்கு ஒரு நல்ல தலைவராகவும், தனது நாட்டுக்கு ஒரு சிறந்த பாதுகாவலராகவும் திகழ்ந்த பூலித்தேவரின் வரலாறு, ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகத்தைத் தரும்.  இன்றைய நாளில், பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா…

அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *