பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… திண்டுக்கல்- செங்கோட்டை ரயில் சேவை ரத்து

ஈரோடு- செங்கோட்டை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமயநல்லூர் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் ஆக.27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு நாள் தோறும் பிற்பகல் 2 மணிக்கு (6845) புறப்படும் ரயில், ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

சமயநல்லூர்- மதுரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல்- செங்கோட்டை இடையே இந்த ரயில் சேவை மேற்குப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் (6846) காலை 5.10 மணிக்குப் புறப்படும். இந்த ரயில், ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை செங்கோட்டை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்; இந்த ரயில்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின்  சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…

வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *