பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… திண்டுக்கல்- செங்கோட்டை ரயில் சேவை ரத்து

ஈரோடு- செங்கோட்டை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமயநல்லூர் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் ஆக.27-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு நாள் தோறும் பிற்பகல் 2 மணிக்கு (6845) புறப்படும் ரயில், ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

சமயநல்லூர்- மதுரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திண்டுக்கல்- செங்கோட்டை இடையே இந்த ரயில் சேவை மேற்குப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் (6846) காலை 5.10 மணிக்குப் புறப்படும். இந்த ரயில், ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை செங்கோட்டை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்; இந்த ரயில்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு- டொனால்ட் டிரம்ப் தப்பியது எப்படி?

பிரிட்டனில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் இரண்டுநாள் அரசுமுறைபயணம் மேற்கொண்டார்.. அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு, அரச…

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!

ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகிறது. ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமே பதிவு செய்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் இந்திய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *