நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைந்து கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை, அந்நாட்டு ஆட்சியாளரான அயத்துல்லா அலி கமேனி இன்று நிராகரித்தார். ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று கூறினார்.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஈரான் முற்றிலும் பாதுகாப்பற்றது, எந்த வான் பாதுகாப்பும் இல்லை. ஈரான் தொடர்பு கொண்டாலும் பேசுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துமா, நடத்தாதா என்பது பற்றி எந்த அறிவிப்பும் டிரம்ப் வெளியிடவில்லை. இது தொடர்பாக அவர், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Related Posts

    இடி, மின்னலுடன் 24 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்…

    தமிழ்நாட்டில் பாமக தலைமையில் புதிய அணியா?- அன்புமணி பேச்சால் குழப்பம்

    வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில்  பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *