அமலாக்கத்துறை 5 இடங்களில் அதிரடி ரெய்டு- காரணம் என்ன?

சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சூளைமேடு, அமைந்தகரை, நெற்குன்றம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருபவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

சென்னை கோயம்பேட்டில் வசித்து வரும் சவுதி என்பவரின் வீட்டிலும், நெற்குன்றத்தில் சிகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் என்பவரின் வீட்டிலும், சூளைமேட்டில் மேதா நகரில் உள்ள ஒருவரின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் அடிப்படையில் இந்த ரெய்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *