ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி- தவெக உறுப்பினர் கைது!

ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தவெக உறுப்பினர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் தண்டுரை பகுதியில் நாட்டு வெடி, பட்டாசுகளை ஆறுமுகம், அவரது மகன் விஜய் தயாரித்து வந்தனர். தீபாவளிக்கு முதல்நாளான அக்.19-ம் தேதி நாட்டு வெடி வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில், பட்டாசு வாங்க வந்த யாசின்(25), சுனில் பிரகாஷ் (23), சுமன் (22), சஞ்சய் (22) ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போது நாட்டு வெடிகளை விற்பனை செய்த ஆறுமுகம், அவரது மகன் விஜய் மற்றும் விஜய்யின் நண்பர் தாமோதரன் ஆகிய 3 பேரும் உயிர் தப்பியது தெரிய வந்தது. இவர்கள் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு, நாட்டு வெடிகளை தயாரித்தது தெரிய வந்தது. இதற்காக கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்து வெடிமருந்துகளை வாங்கி வந்து பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெடிகளை தயாரித்த ஆறுமுகம், தமோதரன் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜய்யை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த விஜய்யை, பட்டாபிராம் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு வெடி செய்ய மருந்து பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, வெடிகளை தயாரித்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் தேடி வந்த முக்கிய குற்றவாளியான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார் எனக் கூறப்படுகிறது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *