பிரதமர் மோடியை ஓய்வெடுக்க சொன்னீர்களா?- அமித்ஷாவிடம் கேட்கப்பட்ட அதிர்ச்சி கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியை ஓய்வெடுக்குமாறு எப்போதாவது அறிவுறுத்தியுள்ளீர்களா என்று கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.,

என்டிடிவி தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிறப்பு நேர்காணல் செய்தார். அப்போது அமித்ஷா கூறுகையில், 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி தான். இத்தகைய அர்ப்ப்பணிப்பு தற்செயலாக வருவதில்லை. பொதுசேவைக்கான அவரது அர்ப்பணிப்பால் மட்டுமே அது சத்தியமானது. மோடியின் ஆற்றல் குறைவது என்ற குறித்த கேள்விக்கே இடமில்லை. அவரது ஆற்றல் மட்டுமே அதிகரிக்கிறது. கடுமையான இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி மிகவும் பிரபலமான பிரதமர். குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலோ அல்லது நாட்டின் பிரதமராக இருந்த காலத்திலோ நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்றும் முழு நாடு மட்டுமல்ல, உலகமே நம்புகிறது. மோடி ஒவ்வொரு பிரச்னைக்கும் பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியும். அவரது எதிரிகள் என்ன சொன்னாலும், அவர் எப்போதும் தனது சக ஊழியர்களின் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு வழிகாட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கு ஏற்ற வகையில் பிரதமர் மோடி தன்னைத் திறமையாக வடிவமைத்துக் கொண்டதாக நான் நினைக்கிறேன். அதனால்தான் அவர் மக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியுடனான தனது உறவு ஒரு தலைவர் மற்றும் தொழிலாளியின் உறவு. பாஜகவில் முதலாளி கலாச்சாரம் இல்லை என்றார் அமித்ஷா.

பிரதமர் மோடியை ஓய்வெடுக்குமாறு எப்போதாவது அறிவுறுத்தியுள்ளீர்களா என்று கேள்விற்கு, ​​தொடர்ச்சியான வேலை பிரதமரின் முடிவுகளிலோ அல்லது பணியின் வேகத்திலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. யாரும், யாரையும் எதையும் திணிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இயல்பு உண்டு, அதன்படி அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்,” என்று அவர் பதிலளித்தார்..

 

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *