பாஜக கூட்டணியில் தேமுதிகவா?- எல்.கே.சுதீஷ் பதில்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றிருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷும் பங்கேற்றதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அப்போது பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்று கேள்விக்கு, நட்பின் காரணமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக எல்கே.சுதீஷ் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிகவிற்கு நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கட்சி அதிருப்தியில் உள்ளது. அத்துடன் திமுகவுடன் நட்புறவுடன் உள்ளது. சட்டமன்றத் தர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *