May 3, 2026

செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுஜி தேவராஜின் மகன் ஞானசேகர் (30), காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

அங்கு செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.