September 19, 2026

லஸ்ஸியில் சிறுநீர் கலந்து கொடுத்த இளைஞர்.. பொதுமக்கள் அதிர்ச்சி…

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில், லஸ்ஸி தயாரிக்கும்போது சிறுநீரைத் தண்ணீரில் கலந்ததாக இளைஞர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உள்ளூர்வாசிகள், கடையைச் சூழ்ந்துகொண்டு ரகளை செய்ததால், கடை உரிமையாளர் அந்த இளைஞரை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.