திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). ஊர்க்காவல் படைவீரர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாலசமுத்திரம் கிராமத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் துப்பாக்கியுடன் நிற்பது போல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஊர்க்காவல் படைவீரர் துப்பாக்கியை கையாண்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, துப்பாக்கியை கொடுத்த சிஆர்பிஎப் வீரர், ராஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Stories
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று கோர்ட்டில் விசாரணை!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: ஊழியர் அதிரடி இடைநீக்கம் -உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவு