April 18, 2026

மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை… சத்தமாக பேசினால் அபராதம்….

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக இருப்பது மெட்ரோ ரெயில்கள் தான். விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் என முக்கிய பகுதிகளை இந்த மெட்ரோ ரெயில்கள் இணைக்கின்றன. இதனால் நாள்தோறும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சிலர் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது, அலைபேசிகளில்பேசுவது சக பயணிகளுக்கு இடையூறு அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை மெட்ரோ நிர்வாகம் விடுத்துள்ளது….