சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தனிப்படை எஸ்ஐ ராஜ்கிரண் தலைமையிலான போலீசார் நேற்று இரவு புளியந்தோப்பு 5வது தெரு ஜங்ஷன் பகுதியில் சோதனை நடத்தி 1026 மது பாட்டில்கள் மற்றும் 60 பீர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புளியந்தோப்பு மாராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த புஷ்பா (72) என்ற சரித்திர பதிவேடு ரவுடி ஆட்களை வைத்து வியாபாரம் செய்துவந்தது தெரியவந்தது. புஷ்பா மீது ஏற்கனவே 25 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சில மது பாட்டில்களை வேறிடத்தில் வைத்துள்ளார் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேசின்பிரிட்ஜ் போலீசாரை வரவழைத்து புஷ்பாவை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தனிப்படை போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இரவு நேரம் என்பதால் புஷ்பாவை காலை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி பேசின்பிரிட்ஜ் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். காலை புஷ்பா காவல் நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைமறைவாகிவிட்டார். அவருடன் சேர்ந்து மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

More Stories
தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது