ஆத்தூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மின்னல் வேகத்தில் மோதிய விபத்தல் 15 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 6 பேருக்கு கால் எழும்பு முறிந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலூரில் இருந்து மும்பைக்கு டயர் லோடு ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. சேலம் ஆத்தூர் அருகே காந்திபுரம் பகுதியில் மதியம் 2 மணி அளவில் லாரி வந்துகொண்டிருந்த போது பிரேக் டவுன் ஆனது. இதனால் அங்குள்ள சர்வீஸ் ரோட்டில் லாரியை நிறுத்தி பழுது பார்க்கும் பணி நடந்தது. அந்த பணி முடிந்து கன்டெய்னர் லாரியை அருகில் உள்ள மற்றொரு சர்வீஸ் சாலைக்கு எடுத்து செல்ல முயன்றனர்.
அந்த நேரத்தில் நாமக்கல்லில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வேகமாக வந்தது. நாமக்கல்லை சேர்ந்த அன்பழகன்(34) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது கன்டெய்னர் லாரி பின்பக்கமாக வருவதை கவனிக்காமல் மின்னல் வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ் பலமாக கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் முன்பக்கம் நொறுங்கியது. பஸ் மோதிய வேகத்தில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தால் பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதியினர் மற்றும் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். தகவல் அறிந்து ஆத்தூர் போலீசாரும் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பச்சமுத்து (20), வினோத் (35), ரம்யா (32), சுப்பிரமணி(52), கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அருள் (33), மற்றும் லாரியில் பயணித்த இருவர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் டிரைவர் (மாற்று) குமரன், பச்சமுத்து, ரம்யா, காந்திமதி, மோகனப்பிரியா, நிவாசனி ஆகிய 6 பேருக்கு கால் எலும்பு முறிந்தது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை! உடலை நடு ரோட்டில் வீசிய கொடூரம்…
1086 மதுபாட்டில்கள் பறிமுதல்: விசாரணையில் ரவுடி எஸ்கேப்…
பள்ளியில் குடிநீர் குடித்த 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!