ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம்!

ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை சஸ்பென்ட் செய்து சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை சஸ்பென்ட் செய்து சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறைந்த விலையில் தங்கக் காசுகள், வீட்டுமனைகள் தருவதாக கூறி 200க்கும் மேற்பட்ட காவலர்களிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்பிலேயே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்? காவல்துறை மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு வெறும் பணியிடை நீக்கம் போதுமா? அல்லது அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள்தான் தேவையா? என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.