மதுரையை சேர்ந்த 33 வயதான பெண், கடந்த 1ம் தேதி பூக்கள் வாங்க மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். பூக்கள் வாங்கியபோது, அங்கு நின்றிருந்த மதுரை, தெற்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த பாண்டியராஜன்(33), அந்த பெண்ணை பார்த்து தகாத சைகைகளை காட்டியுள்ளார். மேலும், அவரை தனது செல்போன் மூலம் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.
பின்னர் பெண்ணை பின்தொடர்ந்து சென்றவர், பாலியல் உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், ஜூன் 4ம் தேதியும் அதே பெண்ணை வழிமறித்து பாலியல் உறவுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு உடன்படாவிட்டால் செல்போனில் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பாண்டியராஜனை கைது செய்தனர்.

More Stories
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று கோர்ட்டில் விசாரணை!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: ஊழியர் அதிரடி இடைநீக்கம் -உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவு