சென்னை:
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப ‘திருக்கோயில் பணியாளர் தேர்வு வாரியம்’ அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
1. பணியாளர் தேர்வு வாரியம்:
- திருக்கோயில்கள் மற்றும் அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கு, விதிமுறைகளின்படி தகுதியான பணியாளர்களை வெளிப்படையாகத் தேர்வு செய்ய புதிய தேர்வு வாரியம் உருவாக்கப்படும்.
2. கோயில் திருப்பணிகள் & கட்டமைப்பு மேம்பாடு:
- பழமையான கோயில்கள்: 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களில் ரூ.125 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சிதிலமடைந்த கோயில்கள் சீரமைப்பு: முதல்கட்டமாக முழுமையாகச் சிதிலமடைந்த 75 கோயில்கள் ரூ.50 கோடியிலும், பகுதியளவு சிதிலமடைந்த 75 கோயில்கள் ரூ.35 கோடியிலும் சீரமைக்கப்படும்.
- மண்டபங்கள் அமைப்பு: சமயபுரம், மருதமலை உட்பட 13 முக்கிய திருக்கோயில்களில் வசந்த மண்டபம், இளைப்பாறும் மண்டபம், சுற்று மண்டபங்கள் ரூ.21.37 கோடியில் கட்டித்தரப்படும்.
3. பக்தர்களுக்கான வசதிகள் & சேவைகள்:
- ஆம்புலன்ஸ் சேவை: பக்தர்கள் அதிகளவில் கூடும் 20 முக்கிய திருக்கோயில்களுக்கு ரூ.3 கோடியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும்.
- சக்கர நாற்காலிகள்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்பாட்டிற்காக, நீண்ட பிரகாரங்களை உடைய 38 கோயில்களில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
- கட்டணமில்லா பேருந்து சேவை:
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து அழைத்து வர ரூ.1 கோடியில் 4 சிறிய பேருந்துகள் (Mini Buses) இயக்கப்படும்.
- திருநெல்வேலி பாபநாசம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் மலைப்பகுதிக்குச் சென்று வர ரூ.1 கோடியில் 2 புதிய பேருந்துகள் வழங்கப்படும்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!