திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே 17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்கள் இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி: வலங்கைமான் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அவரது தாயாரும் நேற்று முன்தினம் தங்கள் வீட்டின் பின்புறத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரகசியமாக மறைந்திருந்த இரு நபர்கள், தங்கள் செல்போன் மூலம் அவர்கள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளனர்.

இதை தற்செயலாக கவனித்த சிறுமி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் வீடியோ எடுத்த நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் விசாரணை மற்றும் கைது: இச்சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தார் தரப்பில் வலங்கைமான் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உத்தாணி கீழத்தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவரின் மகன் ராஜதுரை (வயது 30) மற்றும் அவரது நண்பரான பாபநாசம் பூஞ்சேரி கீழத்தெருவைச் சேர்ந்த தர்மேந்திரன் மகன் விக்னேஷ் (வயது 26) ஆகிய இருவரும்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ராஜதுரை மற்றும் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More Stories
பவுடர்’ வீடியோ: “கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்” – பள்ளி நண்பர் பரபர புகார்…
மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; ‘லிவ்-இன்’ காதலனை கழுத்தை நெரித்து கொன்ற சகோதரிகள்:
ரூ.504 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது: