செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவுக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கல்வி உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து வந்த மீனா முத்தையா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறோம். கல்வி உலகில் யாரும் தொட முடியாத இடத்தை தமிழ்நாட்டில் இருந்து தொட்டவர். செட்டிநாடு கல்விக் குழுமத்தில் பயின்று உலகம் முழுக்க அவரது மாணவர்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க ஒரு மாமனிதரை இன்று இழந்து நிற்கிறோம்.

More Stories
காஸ் சிலிண்டர் பதுக்கி விற்ற தந்தை, மகன் கைது: 40 சிலிண்டர்கள் பறிமுதல்
வீடுகளில் புகுந்து நகை திருடிய 2 பேர் கைது…
பாலியல் பலாத்காரம் செய்து 4 வயது குழந்தை கொலை முதியவர் கைது…