May 2, 2026

கடலூரில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. தீவிர விசாரணை…

கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே, தாடி நத்தம் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி புகழேந்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 4 கொலை வழக்குகளும், பல குற்ற வழக்குகளும் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகழேந்தியை அழைத்து வந்து கொலை செய்தார்களா?, கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.