சென்னை திருவான்மியூர், சித்திரை குளத் தெருவில் ஒரு வீட்டுக்குள் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நேற்று மாலை திருவான்மியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று, குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டுக்குள் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான 40 காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வணிக மற்றும் வீட்டு காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட நீலமேகம் (80), அவரது மகன் குமார் (41) ஆகிய இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் காஸ் சிலிண்டர்களை வீட்டுக்குள் பதுக்கி வைத்து, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை ரூ.3 ஆயிரத்துக்கும், வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர்களை ரூ.6 முதல் ரூ.7 ஆயிரத்துக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் எனத் தெரியவந்தது.
http://jionewstamil.com/2-people-broke-in-and-stole-jewelry/

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
மதுரை தி ஹானஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு: ரூ. 25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
எலும்பை உடைத்திடுவேன்னு பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சிறை! கொன்னுடுவேன்’னு மிரட்டிய அமைச்சருக்கு பதவி நீடிப்பா? த.வெ.க ராஜகுரு நீக்கத்தால் வெடித்த புதிய சர்ச்சை!