மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், ரூ.500 ‘டம்மி’ நோட்டை கொடுத்து மோசடி..

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் ரூ.500 போன்ற தோற்றமளிக்கும் ‘டம்மி’ நோட்டை கொடுத்து மாம்பழங்களை வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நோட்டு செல்லாது என்பதை அறிந்ததும், தனது நாள் முழுவதுமான உழைப்பு வீணானதை நினைத்து அந்த மூதாட்டி நடுரோட்டில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

You may have missed