கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 14ஆம் தேதி சாகை வார்த்துலுடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், அழகிப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன. இன்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் கூவாகம் அழகிப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு