April 20, 2026

அட்ட கத்தி தேவையில்லை, தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அட்டை கத்தி தேவையில்லை, சுறுசுறுப்பானவர்களே தேவை”: தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து  உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.

செயல்பாட்டிற்கு முக்கியத்துவம்

பிரச்சாரத்தின் போது தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், மக்கள் பணியாற்றுவதற்கு சுறுசுறுப்பும், அர்ப்பணிப்பும் உள்ளவர்களே தங்களுக்குத் தேவை என்று குறிப்பிட்டார். “மக்களுக்குப் பயன்படாத, வெறும் பகட்டுக்காக இருக்கும் ‘அட்டை கத்திகள்’ நமக்குத் தேவையில்லை. களத்தில் இறங்கி வேலை செய்யும் வீரர்களே இயக்கத்திற்கும் மக்களுக்கும் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்

எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளை விமர்சித்த உதயநிதி, அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பதாகவும், மற்ற நேரங்களில் சோம்பேறித்தனமாகச் செயல்படுவதாகவும் சாடினார். குறிப்பாக, மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வேகம் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

வெற்றி முழக்கம்

திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறினார். இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, மிகப்பெரிய வெற்றியை ஈட்ட வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.