திருப்பூர்: உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹70,000 பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

திருப்பூர்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராயபுரத்தில் வாகன சோதனை:

திருப்பூர் ராயபுரம் பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரூபாய் 70,000 பறிமுதல்:

விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், மங்கலம் பூமலூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 45) என்பது தெரியவந்தது. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வரும் இவர், தனது இருசக்கர வாகனத்தில் 70,000 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொண்டு சென்றார்.

​சொந்த வேலைக்காக இந்தப் பணத்தைக் கொண்டு செல்வதாக அவர் கூறிய போதிலும், அந்தப் பணத்திற்குரிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் இல்லாத அந்த 70,000 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Posts

அமைச்சராக இருந்தும் அட்ரஸ் இல்லாமல் போனது ஏன்? தூத்துக்குடி சி.த.செல்லபாண்டியனின் அரசியல் வீழ்ச்சி பின்னணி!

தூத்துக்குடி | தமிழக அரசியலில் தென் மாவட்டங்களின் முக்கியத் தொகுதியான தூத்துக்குடியில், அதிமுகவின் முகமாக இருந்தவர் சி.த. செல்லபாண்டியன்   ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், இன்று மீண்டும் ஒரு கடினமான அரசியல் களத்தைச் சந்தித்து வருகிறார். ​அமைச்சராக உயர்ந்த ‘லக்கி’ பயணம்…

சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

மதுரை: “திரையுலகில் மின்னும் நட்சத்திரங்களை நம்பி மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டாம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ​மதுரையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *