காங்கேயம் |
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு அதிகாரிகளைக் கண்டித்து, வரும் 10-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி என்ன?
காங்கேயம் அடுத்த பழையகோட்டை ஊராட்சி, கிழக்கு சேமலைவலசு (புதிய மற்றும் பழைய காலனி) பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாகப் பொதுப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் இருந்த பயன்தரும் தென்னை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி அகற்றிவிட்டு, ஏற்கனவே சொந்த வீடு மற்றும் நிலம் உள்ள 12 தகுதியற்ற நபர்களுக்கு விதிகளுக்குப் புறம்பாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள்
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் உதயா மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் தங்கவேல் ஆகியோர் மீது பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளனர்:
- அதிகார துஷ்பிரயோகம்: தகுதியற்றவர்களுக்குப் பட்டா வழங்கியதோடு, அதைக் தட்டிக்கேட்ட பொதுமக்களை மிரட்டியதாகப் புகார்.
- மிரட்டல்: போராட்டத்தின் அடையாளமாக வீடுகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை அகற்றவில்லை என்றால், காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என கிராம நிர்வாக அலுவலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
- பாரபட்சமான நடவடிக்கை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சிபிஐ (CPI) கட்சியினர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், அதற்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- ”திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால் அவர்களுக்கு ஒரு நீதியா? சாதாரண மக்களுக்கு ஒரு நீதியா?” என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கைஅதிகாரிகளின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்து, இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், வரும் 10-ம் தேதி நாளை தங்களது:- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை






