சேலம் பஸ் நிலையம் அருகில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை அடக்க முடியாமல் சிங்கப்பெண் சிறப்பு படையினர் தவித்தனர். சேலம் பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாநகரில் ரேஷன் கடை உள்ளது. நேற்று முன்தினம் ரேஷன் கடை வாசலில் போதை வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். திடீரென அந்த போதை வாலிபர் எழுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற சேலம் மாநகர சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வாலிபர் போதை தலைக்கேறிய நிலையில் நீங்க என்ன சிங்கப்பெண் சிறப்பு படையா? என்று தாறுமாறாக பேசினார். இதனையடுத்து சிங்கப்பெண் போலீசார் அந்த வாலிபரின் முகத்தில் தண்ணீரை அடித்து போதையை தெளிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள், போதை வாலிபரிடம் சென்று சட்டை போட வைத்து சமாதானம் செய்தனர். பின்னர், அங்கு வந்த டவுன் போலீசார் போதை வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை வாலிபரை அடக்க முடியாமல் சிங்கப்பெண் சிறப்பு படை போலீசார் தவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

More Stories
தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்