கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வேப்பேரி காவல் நிலைய போலீஸார் புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு நகைக்கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள், போதைப் பொருளாக பயன்படுத்த வைத்திருந்த உடல்வலி மாத்திரைகளை வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, போதைப்பொருட்கள் வைத்திருந்த சென்னை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜோசப் (20), கொருக்குப்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மகேந்திரன் பூபதி மாரி (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்களுக்கு போதைப்பொருட்களை கொடுத்து விற்பனை செய்ய சொன்ன புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஷாலினி (26), இவரது கணவர் கவுதம் (27), பெரம்பூர் ஜானகிராமன் நகரைச் சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் (21) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

More Stories
வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …
அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்…
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?