ஜுஹாபுராவைச் சேர்ந்த ரேஹான் (20), ஃபைசல் பதான் (22) மற்றும் ஃபைசான் பதான் (20) ஆகியோர் புதன்கிழமை இரவு முகமது சாலிக்இம்தியாஸ் ஹுசைன் ஷேக்கை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வேஜல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.எம். சௌஹான் தெரிவித்தார்,
பழைய இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 19 வயது இளைஞரைக் கொலை செய்தது, மற்றொருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அகமதாபாத்தில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரவு சுமார் 10:30 மணியளவில், ரேஹான், ஃபைசல் மற்றும் ஃபைசான் ஆகியோர் சாலிக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சாலிக் தனது பழைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில், ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள்’ என்று அவர்களுக்கு சவால் விடுத்திருந்தார். அந்த பதிவு சாலிக்கின் இன்ஸ்டாகிராம் ஆவண காப்பகத்தில் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை,” என்று அந்த அதிகாரி கூறினார்.
ரேஹான்தான் பாதிக்கப்பட்டவரை பிடித்து, அவரது வலது பக்க விலாவில் கத்தியால் குத்தி, உயிருக்கு ஆபத்தானகாயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஃபைசான் கல்லால் தாக்கியதாலும், ரேஹான் முன்கையில் கத்தியால் குத்தியதாலும் காசிப்சையத் என்ற மற்றொரு நபரும் காயமடைந்தார், இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தார்

More Stories
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்ச குற்றச்சாட்டு: வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர் தவெகவிலிருந்து நீக்கம்