April 25, 2026

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பயங்கரம்: தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை – போலீஸ் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பயங்கரம்: சுமை தூக்கும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை – போலீஸ் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜாஜி காய்கறி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக இவர் மார்க்கெட் பகுதியிலேயே தங்கி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் வேலை முடிந்ததும் மார்க்கெட் அருகே இருந்த முரளியை, மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முரளி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தனிப்படை அமைப்பு: தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி சங்கர் கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், முரளியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது மது அருந்தும்போது ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் அரங்கேறிய இந்தத் துணிகரக் கொலை சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள