தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் வாலிபர்கள் சிலர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கீதா மங்கேசை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அங்கே விரைந்து சென்றார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செல்வேஷ் (வயது 30), போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு