தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் வாலிபர்கள் சிலர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கீதா மங்கேசை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அங்கே விரைந்து சென்றார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செல்வேஷ் (வயது 30), போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்