டெல்லியில் ஐஎஸ்ஐ ஆதரவு தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் கேங் பஸ்ட் 2.0என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானை தளமாக கொண்ட குற்றவாளி ஷாஜத் பாட்டி கும்பலுடன் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

More Stories
மதுரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஒரே நாளில் நிகழ்ந்த 3 படுகொலைகளால் மக்கள் பீதி!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது