டெல்லியில் ஐஎஸ்ஐ ஆதரவு தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் கேங் பஸ்ட் 2.0என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானை தளமாக கொண்ட குற்றவாளி ஷாஜத் பாட்டி கும்பலுடன் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது