மும்பையின் கார்கர் பகுதியில் உள்ள துலிப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க குடியிருப்பில் மின்தூக்கி பழுதடைந்ததால் நான்கு இளைஞர்கள் சுமார் 90 நிமிடங்கள் உள்ளே சிக்கித் தவித்தனர். வியாழக்கிழமை நடைபெற்ற இந்த பரபரப்பான சம்பவத்தில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலின்படி, குடியிருப்பின் நான்காவது மாடியில் சென்றுகொண்டிருந்த மின்தூக்கி திடீரென நின்றுவிட்டது. அதே நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், உள்ளே இருந்த நான்கு இளைஞர்களும் வெளியே வர முடியாமல் சிக்கினர்.
மின்சாரம் இல்லாததால் மின்தூக்கிக்குள் முழுக்க இருள் சூழ்ந்தது. காற்றோட்டமும் இல்லாததால் வெப்பம் அதிகரித்து, உள்ளே இருந்தவர்கள் கடும் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது
நீண்ட நேரமாக வெளியே வர முடியாத நிலையில், இளைஞர்கள் உதவிக்காக சத்தமிட்டனர். அவர்களின் குரலைக் கேட்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக சிட்கோ தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நவீன வெட்டும் கருவிகளை பயன்படுத்தி மின்தூக்கி கதவை திறந்தனர். பின்னர் உள்ளே சிக்கியிருந்த நான்கு பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கியிருந்த இளைஞர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர் காட்டிய துரித நடவடிக்கையால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

More Stories
குடும்ப தகராறில் பயங்கரம் கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவர்
தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோயில் திருத்தேர் கவிழ்ந்து விபத்து…
கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து நேரடியாக குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி: