சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு அறிவிப்பில், கே. வெங்கட நாராயணா இந்தப் பொறுப்பை ஏற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும் இந்த சிறப்பு பிரதிநிதி பதவி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போது இந்தப் புதிய பொறுப்பில் திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!